வேலைக்கு போக அடம்பிடித்த மனைவி - கணவன் செய்த கொடூர செயல்.!!
man sucide afyer kill wife in banglore
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் என்பவர் மஞ்சு என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து துபாயில் பெயிண்டராகப் பணிபுரிந்து வந்த தர்மசீலன், பின்னர் வேலையை விட்டுவிட்டு பெங்களூருவுக்கு வந்து மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், தர்மசீலனின் மனைவி வேலைக்கு செல்வதாக தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனை விரும்பாத தர்மசீலன் கடந்த 28ஆம் தேதி இரவு, மதுபோதையில் மஞ்சுவுடன் கடுமையாகத் தகராறு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தர்மசீலன், கத்தியால் மனைவியை 8 முறை குத்திக் கொடூரமாக கொலை செய்து விட்டு, பிறகு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், மஞ்சுவின் தந்தை பெரியசாமி மகளைப் பார்க்க வீட்டிற்கு வந்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தம்பதியர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
man sucide afyer kill wife in banglore