விசித்திர அறிவுறுத்தல்! கை குலுக்கும் பழக்கத்திற்கு ‘NO’...!-பி.சி.சி.ஐ எச்சரிக்கை
Strange instruction NO habit shaking hands BCCI warns
13வது மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா–இலங்கை இணைந்து நடத்துகின்றன. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் கொழும்பில் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்ததால், அவர்களின் அனைத்து ஆட்டங்களும் இலங்கையிலேயே நடைபெறவுள்ளன. அவர்கள் இறுதி சுற்றை எட்டினால் கொழும்பில், இல்லையெனில் நவிமும்பையில் தான் பெரும் நிறைவு.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒவ்வொரு அணி மற்ற அணிகளை ஒரு முறைச் சந்திக்கும். லீக் சுற்றுக்குப் பிறகு டாப்-4 அணிகள் அரையிறுதிக்குச் செல்கின்றன. தொடக்க ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டியது.
வருகிற ஞாயிறு, கொழும்பில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் காத்திருக்கிறது. ஆனால், பி.சி.சி.ஐ. இந்திய வீராங்கனைகளுக்கு “பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம்” என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“விதிமுறைகள் பின்பற்றப்படும், ஆனால் கைகுலுக்கல் அல்லது நட்புரையாடல் உறுதி இல்லை” என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் சுவாரஸ்யமாக, இதற்கு முன்னர் 2025 ஆசியக் கோப்பையிலும், இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கலை தவிர்த்தது நினைவிருக்கிறது.
English Summary
Strange instruction NO habit shaking hands BCCI warns