ஜீன்ஸ் அணிந்ததால் காதலி கழுத்து நெரித்து கொலை - மும்பையில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற வாலிபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு பிடிக்கவில்லை.

இது தொடர்பாக வினோத், சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

ஆனால், தப்பித்து சென்ற வினோத் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தியதையடுத்து, வினோத்குமார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested kill girl friend for wear jeans in maharastra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->