மது தர மறுத்த ஆத்திரம் - ஊழியர்களுடன் கடைக்கு தீ வைத்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த வாலிபரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "மதுர்வாடா பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் வாலிபர் ஒருவர், மதுபானம் கேட்டுள்ளார். ஆனால், அப்போது கடையை மூடும் நேரம் என்பதால் கடை ஊழியர்கள் அவருக்கு மது கொடுக்க மறுத்தனர்.

இதன் காரணமாக அந்த நபருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த நபர், அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து அந்த அவர் அமைதியாக இருக்காமல், நேற்று மாலை, ஒரு பெட்ரோல் கேனுடன் மீண்டும் மதுபானக்கடைக்கு வந்தார்.

அங்கு, தான் வைத்திருந்த பெட்ரோலை கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி விட்டுத் தீ வைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உயிரைக் கைபற்றிக் கொள்வதற்காக கடையை விட்டு ஓடினர். 

இதில், கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ஒரு கணினி மற்றும் பிரிண்டர் உட்பட ரூ. 1.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for fire to tasmac in andira


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->