இளம்பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக நிற்க வைத்த வாலிபர் - தெலுங்கானாவில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த மாரய்யா என்ற வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்ன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாரய்யாவை தாக்கியுள்ளார். பதிலுக்கு மாரய்யாவும் அந்த பெண்ணை தாக்க தொடங்கினார். இதில் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்தன.

இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் ஓடி வந்து மாரய்யாவை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணையும் தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து தாக்குதலை நடத்திய மாரய்யா அந்தப் பெண்ணின் ஆடைகளை முழுவதுமாக கிழித்து ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நிற்க வைத்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அருகில் இருந்த பேனரை கிழித்து அந்த பெண் மீது போர்த்தி மூடி உள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர்  சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் படி போலீசார் மாரய்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் வாலிபர் ஒருவர் தெருவில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி ஆடைகளை கிழித்து நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for attack woman in telunagana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->