பா.ஜ.கவை திருப்திப்படுத்தவே தேர்தல் ஆணையம் இதை செய்துள்ளது... - மம்தா பானர்ஜி பேச்சு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம், போல்பூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, நாடு முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. இருப்பினும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்பெல்லாம் மே 2 அல்லது மூன்றாம் தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயிலுக்கு இடையே மூன்று மாதங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

பா.ஜ.கவை திருப்தி படுத்துவதற்காகவே தேர்தல் ஆணையம் மூன்று மாத காலத்திற்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee accusation 7 phase elections


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->