தாத்தாவின் அறக்கட்டளையில் நிர்வாக பிரச்சனை.. பிணமாக மீட்கப்பட்ட பேத்தி.. விசாரணையில் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் தொழு நோயாளிகளுக்கான மகாராகி சேவா சமிதி அறக்கட்டளையை நிர்வகித்து வந்தவர் பாபா ஆம்தெ. இவரே இந்த அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். பத்ம விபூஷண் விருது பெற்ற பாபா ஆம்தெ, கடந்த 2008 ஆம் வருடத்தில் உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து அவரின் மகாராகி சேவா சமிதி அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், இந்த அறக்கட்டளையில் பாபாவின் பேத்தியான ஷீத்தல் ஆம்தெவிற்கும் - அவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இரு தரப்பினரும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி விமர்சித்து வந்த நிலையில், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய ஷீத்தல் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Chandrapur girl suicide


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->