தாத்தாவின் அறக்கட்டளையில் நிர்வாக பிரச்சனை.. பிணமாக மீட்கப்பட்ட பேத்தி.. விசாரணையில் காவல்துறை.!
Maharashtra Chandrapur girl suicide
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் தொழு நோயாளிகளுக்கான மகாராகி சேவா சமிதி அறக்கட்டளையை நிர்வகித்து வந்தவர் பாபா ஆம்தெ. இவரே இந்த அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். பத்ம விபூஷண் விருது பெற்ற பாபா ஆம்தெ, கடந்த 2008 ஆம் வருடத்தில் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரின் மகாராகி சேவா சமிதி அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், இந்த அறக்கட்டளையில் பாபாவின் பேத்தியான ஷீத்தல் ஆம்தெவிற்கும் - அவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி விமர்சித்து வந்த நிலையில், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய ஷீத்தல் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra Chandrapur girl suicide