மஹாராஷ்டிரா : 6 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசிக் கொன்ற கொடூர தாய்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கணவர் வீட்டார் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து தூக்கி எறிந்துள்ளார்.

இதனையடுத்து தண்ணீருக்குள் விழுந்த குழந்தைகள் மூழ்கிய நிலையில் அலறியதால் இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கடந்த 6 குழந்தைகளையும் மீட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட, பத்து வயதுக்குட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். இதனையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் குடும்ப பிரச்சினையில் அந்த பெண்ணை கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த அப்பெண் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra brutal mother threw 6 children in a well in a row


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->