குழந்தைகள் கண்முன்னே தாய் அடித்து கொலை... கொடூர கணவனால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பிஸாதேவி பகுதியை சார்ந்தவர் கவிதா சித்திஷ் திரிவேதி. இவரது கணவர் சித்திஷ். இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

தம்பதிகளுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சித்திஷ் அவரின் மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அரங்கேறிய சண்டையில் ஆத்திரமடைந்த சித்திஷ், குழந்தைகள் முன்னிலையிலேயே தாயை அடித்து கொலை செய்துள்ளார். 

இதன்பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Aurangabad wife Murder by Husband 19 Feb 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->