காதலனை நம்பி சென்ற பெண்ணை கற்பழித்து, சாக்குமூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசி சென்ற பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தன்னுடன் பயின்று வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காதலியை, அவரது காதலன் நந்திகிராமில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு காதலனின் நண்பர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கூறவே, காமுக கூட்டம் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

இதன்பின்னர், மாணவியை கொலை செய்யும் நோக்கத்தோடு, கத்தியால் குத்தி சாக்குமூட்டையில் கட்டி அங்குள்ள இரயில்வே தண்டவாள பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். சாக்குமூட்டை அசைவதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சாக்குமூட்டையை பிரித்து பார்க்கையில் பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவியை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh girl sexual abuse by Love boy and his Friends Police Arrest Culprit Gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->