நீடிக்கும் அதிர்ச்சி!...நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த  20 வயது இளைஞரை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம்,லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலான மாபியா கும்பல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக நடப்பு  ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இதே போல், கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் மற்றும் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி பாபா சித்திக்யின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு நொய்டாவின் செக்டார் பகுதியில் இருந்து மிரட்டல் விடுத்த 20 வயதான முகமது தையப் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lasting shock actor salman khan death threat was arrested by the youth


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->