கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்.!
Kerala doctor got suicide on her birthday
கேரளாவில் 12வது மாடியில் இருந்து குதித்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிப்பவர் சதா ரஹமத் (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு நேற்று பிறந்தநாள் அதனால தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் விழுது என் காவலாளி அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெண் மருத்துவர் சதா ரஹ்மத் அங்கு ரத்த வெள்ளத்தில் இருந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கோழிக்கோடு போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Kerala doctor got suicide on her birthday