3 குழந்தைகளுக்கு தாயான பெண்மணியை, அனுதினமும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய கொடூரன்..!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் 30 வயது பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி மாவட்டத்தின் சாசனா பகுதியை சார்ந்த 30 வயது பெண்மணிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த பெண்மணி சம்பவத்தன்று அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழுதபடி வந்துள்ளார். 

இவரை மீட்ட காவல் துறையினர், இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சாசனா பகுதியை சார்ந்த நபர் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவும் செய்துள்ளார். 

இந்த விடியோவை காண்பித்து பெண்மணியை காமுகன் தினமும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக அறிந்த கணவர் உள்ளுர் பஞ்சாயத்தாரிடம் விஷயத்தை கூறிய நிலையில், எந்த விதமான பலனும் இல்லை. 

இதனையடுத்து பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்திற்கு வந்துள்ளது தெரியவந்தது. இந்த பெண்மணியின் வாக்குமூல அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகனை தேடி வருகின்றனர். மேலும், பெண்மணியை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kashmir woman sexual abuse and torture police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->