தறிகெட்டு ஓடிய லாரி.. காரை இடித்து, தேநீர் கடைக்குள் பாய்ந்து அரங்கேறிய கோர விபத்து.. பரிதாபமாக பலியான உயிர்கள்.!
Karnataka Chikkaballapur Chitrapura Lorry Accident 4 Members died
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் அருகேயுள்ள சிட்லபுரா தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இன்று அதிகாலை தேநீர் கடையருகே கார் நின்று கொண்டு இருந்தது. அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த லாரியொன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, காரின் மீது மோதி மரத்தில் முட்டி கடைக்குள் புகுந்தது.
இதனால் தேநீர் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து நொறுங்கிய நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியான நிலையில், கடைக்குள் உயிருக்கு போராடிய மேலும் 3 பேரை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகவே, மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த விஷயம் தொடர்பாக நந்திகிரிதாம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், சிக்பள்ளாபூர் பகுதியை சார்ந்த வழக்கறிஞர் யமுனாசாரி, வெங்கடேஷ், பெங்களூரை சார்ந்த களஞ்சியம், நிதீஷ் கவுடா ஆகியோர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய ஓட்டுனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Chikkaballapur Chitrapura Lorry Accident 4 Members died