ஆண்களுக்கு வாரத்திற்கு தலா 2 மது பாட்டில் இலவசமாக கொடுங்க - சட்டமன்றத்தை பதறவைத்த எம்.எல்.ஏ!
Karnataka Assembly MLA JDU liquor bottles
கர்நாடக சட்டசபையில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில், கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடியூ) எம்.எல்.ஏ. எம்.டி. கிருஷ்ணப்பா அரசு விதித்த கலால் வரி உயர்வை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "கடந்த ஒரு ஆண்டில் மூன்று முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீண்டும் வரி உயர்த்தினால், அரசின் இலக்கான ரூ.40,000 கோடியை எட்டுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர், மதுபானம் அருந்துவதை தடுக்க முடியாது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் வழங்கப்படுவதுபோல், ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மது பாட்டில்களை வழங்குங்கள். இல்லையெனில், ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை எப்படி கொடுக்க முடியும்?" என தெரிவித்தார்.
English Summary
Karnataka Assembly MLA JDU liquor bottles