ஜம்மு காஷ்மீர் : உதம்பூரில் திடீர் நிலச்சரிவு - போக்குவரத்துக்கு தடை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டடுள்ளது. இதன் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும், மக்கள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து நேற்று போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது, "தேவால் பாலம் அருகே பெரிய கற்கள் சரிந்து விழுந்துள்ளது. 

இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபக்கத்திலும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுகளின் அனுமதி இல்லாமல் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பயணம் செய்ய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இன்று வெளியிட்டுள்ள பதிவில், "ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முகலாய சாலை மற்றும் எஸ்.எஸ்.ஜி சாலை வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu srinagar national highway road land slide in uthamboor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->