#Breaking: தமிழகத்தின் 2 மாநிலங்களவை பதவியிடத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021-இல் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைத்தியலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதனைத்தொடர்ந்து, வைத்தியலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் அவர்களின் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர். 

இதனால் 2 மாநிலங்களவை பதவி காலியாக இருந்த நிலையில், திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, இந்த 2 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சார்ந்த வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கே.பி முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கள் செய்ய கடைசி நாள் என்றும், வேட்புமனுவை வாபஸ் பெற இறுதி தேதி செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Election Commission Announce Tamilnadu 2 Rajya Shaba Election Date 4 October 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->