இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் பயணம் ஒத்திவைப்பு..!
Indian astronaut Subhanshu Shukla mission postponed
'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) இணைந்து, 2025-இல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பவுள்ளது.
கடந்த மே மாதம் 29-ஆம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்வதாக இருந்தது. இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தார்.

ஆனால், இந்த பயணம் வரும் 08-ஆம் தேதி மாலை 06:41 மணிக்கு விண்வெளிமையம் செல்வதாக இருந்தது. இந்நிலையில், இந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி மாலை 05:52 மணிக்கு சுபான்ஷூ சுக்லா விண்வெளி மையம் செல்வார் என ஆக்ஸியாம் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒத்திவைப்பிற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
தற்போது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விண்வெளி செல்வதற்கான தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் அவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Indian astronaut Subhanshu Shukla mission postponed