இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பொறுப்பேற்றுள்ளார்.

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்தவர் அபிலாஷா பாரத். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான் பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை ஓம் சிங் ஆவார். இவர் காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.

அபிலாஷா பாரத் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள போர்விமானங்கள் பயிற்சி பள்ளியில் 36 ராணுவ போர் விமானிகளுடன் பறக்கும் பயிற்சியை முடித்து முதல் இந்திய பெண் போர் விமானியாக பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் அணிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India First woman war pilot


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->