அக்னி சிறகே! பாலியல் தொல்லை கொடுத்த நபரை பெண்கள் ஒன்றுசேர்ந்து எரித்து கொன்ற சம்பவம்...!
incident where a woman got together and burned a man to death for harassing
ஒடிசா மாநிலத்தில் நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது முதியவரை, பெண்கள் ஒன்று சேர்ந்த குழு அவரைக்கொன்று உடலை தீயில் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் ஜூன் 3 ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் உடலை தீயில் எரித்துள்ளனர்.இதில் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கடந்த 4 ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்த விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது 6 பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முடிவுகட்டவே இந்த கொடூர முடிவை எடுத்ததாக கைது செய்ப்பப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவலர்கள், இறந்தவர் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டெடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
incident where a woman got together and burned a man to death for harassing