வேறு ஒருவருடன் தகாத உறவு: மனைவி தலையை துண்டித்த கணவன்..! - Seithipunal
Seithipunal


வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்த மனைவியின் தலையை  துண்டித்த கணவன்அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார். தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த 28 வயதான  சங்கர் மற்றும் மனைவி,குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்துவந்தார்.  ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி மீது யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை மனைவி தகாத உறவில் மாட்டிகொண்டாள்.

கடந்த 3ஆம் தேதி, சம்பவத்தன்று கணவன் சங்கர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். நாளை காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது வேலை விரைவாக முடிய,  கணவன் சங்கர் இரவே வீட்டிற்கு திரும்பியபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்த கணவன் சங்கர் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். 

பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து சங்கருடன் தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் சங்கர் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.

அப்போது  கடுங்கோபம் கொண்ட சங்கர் மனைவியை கடுமையாக தாக்கி மனைவியின் கழுத்தை  துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார். தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Inappropriate relationship with someone else Husband beheaded his wife


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->