இமாசலில் கனமழையில் 74 பேர் உயிரிழப்பு.. 10 மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் !
In Himachal 74 people lost their lives in heavy rainA miracle where a 10-month-old baby survived
இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பேரிடர் நிலை உருவாகியுள்ளது.
சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் சீர்திரிபட்டு, வீடுகளும் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கடுமையான சூழ்நிலையில் சிம்லா மாவட்டத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சிம்லாவை சேர்ந்த ரமேஷ் (31), அவரது மனைவி ராதா (24), மகள் நீதிகா (10 மாதங்கள்), மற்றும் அவரது தாய் பூர்னா (59) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ரமேஷ் குடும்பத்தினர் மூவர் வீட்டுடன் அடித்துச்செல்லப்பட்டனர்.
இந்த பரிதாபமான சூழலில், 10 மாத குழந்தை நீதிகா மட்டும் அண்டை வீட்டாரின் உதவியால் உயிருடன் மீட்கப்பட்டார். அவர்களை சிக்கலில் இருந்து மீட்டவர் – காவல்துறையில் பணியாற்றும் பல்வந்த் என்ற அதிகாரி.
பல்வந்த், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தையை பாதுகாப்பாக மீட்டதற்காக பெருமளவிலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். சமூக ஊடகங்களிலும், பொதுமக்களிடையிலும் அவரது செயல் ஹீரோக்களுக்குச் சமமாக போற்றப்படுகிறது.
இமாசலத்தில் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையணி (NDRF), போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
English Summary
In Himachal 74 people lost their lives in heavy rainA miracle where a 10-month-old baby survived