பசியால் இறந்து கிடந்த நாயை சாப்பிட்ட இளைஞர்.. பகீர் வீடியோ.!!
in Delhi migrate worker ate died dog in road
கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 நாட்களுக்கு அதிகமாகிவிட்டது. ஊரடங்கின் காரணமாக உள்ளூர் தொழிலாளர்களில் இருந்து பிற மாநிலத்தில் பிழைப்பிற்க்காக வந்த தொழிலாளர்கள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
மேலும், தங்களின் சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியாக பலர் சாலை மார்க்கமாக நடந்தே செல்லும் வழியை தேர்ந்தெடுத்து, நடந்தே செல்ல துவங்கினர். இந்நிலையில், ஜெய்ப்பூரை சார்ந்த பிரதிமன் சிங் என்ற நபர் பதிவு செய்த வீடியோ காட்சி பெரும் வைரலானது.
இது குறித்த வீடியோ காட்சியில், டெல்லி நோக்கி பயணம் செய்த பிரதிமன், அங்குள்ள ஷாஹ்புரா பகுதியில் சாலையில் இறந்த நாயின் உடலை பசியால் இளைஞர் சாப்பிடும் பகீர் வீடியோ வெளியானது. மேலும், அவருக்கு பிரதிமன் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியிருந்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Delhi migrate worker ate died dog in road