லஞ்சம் கேட்டால் நேரடியாக எனக்கு புகார் அளிக்கலாம் - முதல்வர் அதிரடி...!
If you ask for a bribe you can complain directly
இனி லஞ்சம் கேட்டால் ஹெல்ப் லைன் மூலம் புகார் அளிக்கலாம் பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அவர் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பகத்சிங்கின் தியாகி தினத்தன்று ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான ஹெல்ப்லைன் ஒன்று தொடங்கப்படும் எனவும் அதில் எனக்கு தனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் யாராவது லஞ்சம் கேட்டார் அவர்களின் ஆடியோ அல்லது வீடியோவை பதிவு செய்து அதற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பஞ்சாபில் ஊழலுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். நேர்மையான அதிகாரிகள் நான் எப்பொழுதும் துணை நிற்பேன் என பதிவிட்ட அவர் இனி யாரிடம் இருந்தும் பணம் பறிக்கமாட்டாது என தெரிவித்தார்.
English Summary
If you ask for a bribe you can complain directly