மனைவியின் மாதவிடாய் இரத்தத்தை மாந்திரீக பூஜைக்கு விற்ற கொடூர கணவன்.!
husband sold his wife menstrual blood for witchcraft
மனைவியின் மாதவிடாய் இரத்தத்தை மாந்திரீக பூஜைக்கு விற்ற கணவன் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீடில் உள்ள சவுந்தனா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் மாமியாரால் கொடூரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில் மாதவிடாய் காலத்தில் அப்பெண்ணின் ரத்தத்தை எடுத்து மாந்திரீக பூஜைக்காக 50,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு 3 நாட்கள் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டே கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்து புனே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பாஜக அமைச்சர் சந்திரகாந்த் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
husband sold his wife menstrual blood for witchcraft