மனைவி கழுத்து அறுத்து கொலை.! தலைமறைவான கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று விட்டு தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் தொழிலாளி சிவராஜ். இவரது மனைவி மஞ்சுளா(38). இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவின் கழுத்தை அறுத்து சிவராஜ் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான சிவராஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் 300 கிராமங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பிறகு சிவராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for murder wife in bangalore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->