மிர்சாகுடா கேட் அருகே கோர விபத்து...! - அதிகாலை நேரத்தில் 4 இளைஞர்கள் பலி
horrific accident near Mirzaguda Gate Four young men killed early morning hours
தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

இந்த துயர சம்பவத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், உயிரிழந்தவர்கள் கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் மேலும் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயம் அடைந்து, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தின் வேகம், சாலை நிலை மற்றும் பிற காரணங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
horrific accident near Mirzaguda Gate Four young men killed early morning hours