அடுத்தடுத்து 5 பெண் குழந்தைகள்.. தாயின் ஆண் வாரிசு ஏக்கத்தால், அரங்கேறிய சோகம்.!
Haryana Mother Murdered 5 Children and Attempt Suicide Police Investigation 11 Feb 2021
பெண் குழந்தை பிறந்துள்ள கவலையில், குழந்தைகளை கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தை சார்ந்த பெண்மணி பர்மீனா. இவரது கணவர் குர்ஷித். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பெண்மணி நான்கு பெண் குழந்தைகளை தற்போது வரை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், பெண்மணிக்கு தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது. இதற்காக பல பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியாக பெண்மணி கர்ப்பமாகிய நிலையில், அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய பெண்மணி, கணவர் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில் ஐந்து பெண் குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து, தற்கொலைக்கு முயற்சித்து வீட்டில் மயங்கி இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், பெண்மணியின் 5 குழந்தைகளும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Haryana Mother Murdered 5 Children and Attempt Suicide Police Investigation 11 Feb 2021