பிராமணர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு...உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு...! - பொதுநல மனு தள்ளுபடி
Hate Speech Against Brahmins Supreme Court Delivers Decisive Verdict Public Interest Litigation Dismissed
பிராமண சமூகத்தைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் வெறுப்புப் பேச்சுகளைச் சாதியப் பாகுபாடு குற்றமாகக் கருத வேண்டும் என்றும், அத்தகைய வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மகாலிங்கம் பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது பாதிக்கப்பட்டவர்கள் உரிய அதிகார அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தியதுடன், இந்தத் தகுதி நீக்கக் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
English Summary
Hate Speech Against Brahmins Supreme Court Delivers Decisive Verdict Public Interest Litigation Dismissed