குழந்தைகளிடம் தாய் மொழியில் மட்டும் தான் பேச வேண்டும் - உள்துறை அமைச்சர் பேச்சு.!
gujarat sarthar vallabai patel birthday function union minister amithsa speach
இன்று குஜராத் கல்விச் சங்கத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 147 ஆவது பிறந்த நாள் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
“நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. ஆனால் எந்த ஒரு மொழியும் மரணிக்க விட்டு விடக் கூடாது என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் எந்த மொழியினை வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால் உங்கள் தாய் மொழியை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது.
பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் தாய் மொழியிலேயே பேசுங்கள். அதேபோன்று இளைஞர்களும் அவர்களின் தாய் மொழியைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேச வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
English Summary
gujarat sarthar vallabai patel birthday function union minister amithsa speach