செல்பி எடுக்கும் போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி.. மணமகன் சடலமாக மீட்பு..!
Groom Dead Into Water
செல்பி எடுக்கும் பொழுது புதுமாப்பிள்ளை ஆற்றில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், கோழிக்கோடு பாலோரி பகுதியை சேர்ந்தவர் ரஜி. இவருக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், அவரது குடும்பத்தினருடன் கோழிக்கோட்டில் ஜானகி காடு என்னும் பகுதிக்கு சென்றனர். தனியாக செல்பி எடுப்பதற்காக அங்குள்ள செல்பி எடுக சென்றனர்.
அப்போது, ரஜி கால்தவறி புதுமண தம்பதி இருவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர்.
அப்போது மணமகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஆற்று சூழலில் மாட்டி மணமகன் ரஜி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.