ராஜஸ்தான்: 7ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.! அரசு பள்ளி ஆசிரியருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பூண்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருபவர் 45 வயது ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் பயிலும் 12 வயதுடைய 7ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பள்ளி நேரத்தில், பள்ளி கட்டிடத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இதையறிந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆசிரியரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt school teacher booked for molesting 7th class girl in Rajasthan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->