சிறுமி கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி கடந்த இரண்டாம் தேதி மாயமான நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி சிறுமி பாதாள சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்டார். பிறகு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

இதற்கிடையே போலீசார் தீவிர விசாரணை நடத்திய பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (வயது 19),  விவேகானந்தன் (வயது 59) இருவரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேல்விசாரணை நடத்துவதற்கு ஐபிஎஸ் கலைவாணன் தலைமையிலான சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ், விவேகானந்தர் இருவரையும் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டை மூலம் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனை பார்த்த கருணாஸ் கத்தி கூச்சலிடவே அங்கிருந்த போலீசார் சென்று விவேகானந்தனை காப்பாற்றினர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என சிறை காவலர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl murder case main culprit attempted suicide


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->