திருமணம் ஆன 12 மணிநேரத்தில் காதலி எடுத்த முடிவு! அதிர்ச்சியில் காதலன்!!
girl end up her marriage within 12 hours
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அவரது பள்ளி தோழன் ஒருவரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்களது காதல் விவகாரம் வீட்டில் தெரிய வரவே, மாணவன் சந்தீப் மீது பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், சில மணி நேரங்களில் அந்தப் பெண் புகாரை வாபஸ் பெற்று உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அந்த பெண்ணை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண் சந்தீப் வீட்டுக்கு சென்று என் பெற்றோர் செய்த தவறுக்கு மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
அதன்பேரில் சந்திப்பின் வீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான இரண்டு மணி நேரத்திலேயே அந்தப் பெண் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். நிலையில்லாத காதலியின் மனதால் வெறுத்து போன சந்தீப் அதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் கூறுகையில்," நான் உண்மையாகத் தான் காதலித்தேன் ஆனால் அவள் நிலையற்ற மனநிலையில் இருக்கிறாள். என்னை காதலிக்கிறாளா? என்பது அவருக்கே தெரியவில்லை: என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் பெண் வீட்டாரை அழைத்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
girl end up her marriage within 12 hours