பெற்ற குழந்தையை விற்ற நாடமாடிய தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Girl Child Sell in Asam
பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹப்பூர் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி புதன்கிழமை தம்பதி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக அந்த குழந்தையின் தந்தை மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.இதனால், சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதில், தந்தையே குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் லக்கிம்பூரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவருக்கு 6000 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்தனர்.
குழந்தையை மீட்ட காவல்துறையினர் தாயாரிடம் ஒப்படைந்தனர். அதனை தொடர்ந்து குழந்தை கடத்தலுக்கு தொடர்புடைய ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.