வெப் சீரிஸ் பாணியில் வந்த கொள்ளை கும்பல் - பெங்களூருவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹெட்மாஸ்டர் லே அவுட்டில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவில் திருட்டுக் கும்பல் ஒன்று முகமூடி அணிந்து கைத்துப்பாக்கியுடன் அரை நிர்வாணமாக நுழைந்தது. அதில், இரண்டு பேர் வீட்டின் கதவைத் திறந்து திருட உள்ளே நுழைந்தனர்.

இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்த தகவலின் படி வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அந்தக் கொள்ளைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், உடுப்பி மாவட்டத்தில் அதே போன்ற கொள்ளைக் கும்பல் பனியன், ஜட்டியுடன் முகத்தில் எண்ணெய் பூச்சியுடன் நேற்று நள்ளிரவு ஒரு வீட்டின் உள்ளே புகுந்து தங்க நகைகளைத் திருடிக்கொண்டு ஓடியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளது.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கும்பல், 'டெல்லி கிரைம் 2' வெப் சீரிஸில் உள்ள பனியன் கும்பலை ஞாபகப்படுத்தும் விதமாக, செருப்புகளை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்துள்ளது.இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அக்கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தத் தொடர்ச் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang robbery in karnataga uduppi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->