ஆமதாபாத் விமான விபத்து: 03 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் பலியான சோகம்; கேரளாவை சேர்ந்த செவிலியர் ஒருவரும் உயிரிழப்பு..!
Five members of the same family die in Ahmedabad plane crash including a nurse from Kerala
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் 204 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிர் தப்பியுள்ளார். மீதமுள்ளவர்கள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், விமான விழுந்த நொறுங்கிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 05 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விமானம் விழுந்த அதே குடியிருப்பு பகுதில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் தற்போது வரை தேசிய பேரிடர் மீட்புப் படையில் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த விமானத்தில் பயணித்த முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (68) விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற குஜராத் முன்னாள் விஜய் ரூபானி 12-ஆவது பயணியாக பயணித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 03 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். இந்த நிலையில், விமான விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த கோர விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி பகுதியை சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா நாயர் (40) உயிரிழந்துள்ளார் என்ற ததகவலும் வெளியாகியுள்ளது. ஓமனின் சலாலாவில் செவிலியராக இருந்த ரஞ்சிதா, வேலைக்காக இங்கிலாந்து செல்ல இந்த விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Five members of the same family die in Ahmedabad plane crash including a nurse from Kerala