பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு - பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்.!!
fetus in new born baby at banglore
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தனது 2-வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 23-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில், அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கிம்ஸ் மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஈஸ்வர் ஹசாபி தெரிவித்ததாவது:- "பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்துள்ளது. முதுகெலும்புடன் கூடிய கரு உள்ளது. தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இது ஒரு அரிய நிகழ்வு என்றுத் தெரிவித்தார்.
English Summary
fetus in new born baby at banglore