மகன் முன்னே கணவனை அடித்து கொன்ற மனைவி! அடுத்து நடந்த பயங்கரம்!
Family Murder Police Investigation Gujarat
குஜராத் மாநிலம் அகமதாபாதில் குடும்பத் தகராறு ஒரு உயிரிழப்பு மற்றும் தற்கொலைக்கு வழிவகுத்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முகேஷ் பர்மர் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்தது. சம்பவத்தன்று காலையில் மீண்டும் வாக்குவாதம் உருவாக, சங்கீதா அதீத கோபத்தில் முகேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, இந்தக் கொடூர நிகழ்வை தன் கண் முன்னே கண்ட சங்கீதாவின் 7 வயது மகன் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருந்தார். பின்னர் சங்கீதாவும் தானாகவே உயிரை மாய்த்துக்கொண்டார்.
முன்னதாக, சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அதில் திருமணத்தில் ஏற்பட்ட மனமுடைவு மற்றும் பணச்சிக்கல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அகமதாபாத் நகரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Family Murder Police Investigation Gujarat