இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்ற ஹரியானா இளைஞர் கொடூரக் கொலை – 5 பேர் கைது!
England haryana higher education student Murder case
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் குமார் ஷியோரன் (30), இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையும் பின்னணியும்
இந்தியாவில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த விஜய் குமார், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்துக்குச் சென்றார்.
சம்பவம்: இந்த மாதம் 25-ஆம் தேதி, இங்கிலாந்தின் வெர்ஸ்டர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார்.
உயிரிழப்பு: பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையும் கோரிக்கையும்
இங்கிலாந்து காவல் துறையினர் விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குடும்பத்தின் வேண்டுகோள்: உயிரிழந்த விஜய்யின் உடலை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு, அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary
England haryana higher education student Murder case