உ. பி || நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - குழந்தை உள்பட 8 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உள்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்ததுடன் காருக்குள் இருந்து கருகிய நிலையில் 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பஹாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் "இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples died for car fire accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->