குடிமகன்களுக்கு ஷாக்.. மதுக்கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும் நிறைவடைகிறது. 

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட உள்ளனர். 

நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

ஏற்கனவே கேரளாவில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 6 மணி வரை அனைத்து விதமான மது கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI order to close wine shop 2 days in Kerala


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->