குடிமகன்களுக்கு ஷாக்.. மதுக்கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு.!!
ECI order to close wine shop 2 days in Kerala
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஏற்கனவே கேரளாவில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 6 மணி வரை அனைத்து விதமான மது கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
ECI order to close wine shop 2 days in Kerala