மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது தலைநகர் இம்பாலில் இருந்து வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உக்ருல் நகரில் காலை 6.14 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிலர் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.31 மணியளவில் மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of magnitude 4 point 0 Strike Ukhrul manipur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->