அருணாச்சல பிரதேசத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூடான் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு கமெங்கில் மதியம் 12.12 மணி அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய-வடக்கு அசாம் மற்றும் பூடானின் கிழக்குப் பகுதியிலும் உணரப்பட்டன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இவரை வெளியாகவில்லை. மேலும் வடகிழக்கு பகுதி அதிக நில அதிர்வு மண்டலத்தில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 3 point 8 magnitude hits arunachal pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->