பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
Earthquake in Punjab 4.1 rictor measurement
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் நகரில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் அம்ரித்சார் நகரில் இருந்து 145 கி.மீ. வடமேற்கில் சுமார் 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Earthquake in Punjab 4.1 rictor measurement