நிலநடுக்கத்தால் நடுங்கிய ஜம்மு காஷ்மீர் - மக்களின் நிலை என்ன?
earthquake in jammu kashmeer
கடந்த சில நாட்களாகவே உலக நாடுகளில் நிலநடுக்கம் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், பீதியில் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நள்ளிரவு 12.38 மணி அளவில் ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில், 3.9 ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவல்களை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஜப்பான் நாட்டில் மூன்று மணி நேரத்தில் முப்பது முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுமார் 62 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
earthquake in jammu kashmeer