கடும் பனிமூட்டம்: 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து! - Seithipunal
Seithipunal



கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லி நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.  

தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழலில், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

பகல் நேரத்திலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர், ஏனெனில் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாகனத்தின் முகப்பு விளக்கை எறியவிட்டபடியும், மிதமான வேகத்திலும் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் என்று போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி நெடுஞ்சாலையில் மொராதாபாத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கார், ஹபூரின் பாபுகர் பகுதியில் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் இம்ரான் மற்றும் அவரது மனைவி ஹீனா காயமடைந்தனர். இதனுடன் தொடர்ந்து 7 வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதின.  

விபத்து தொடர்பாக காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் உதவியுடன் பழுதடைந்த வாகனங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhil NH road accident


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->