கோயிலில் மேடை இடிந்து விழுந்து விபத்து: பெண் பரிதாப பலி! 17 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு டெல்லியில் உள்ள கல்காஜி கோவிலில் கீர்த்தனை மேடை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 40 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்கிழக்கு டெல்லியில் உள்ள கல்காஜி கோவிலில் நேற்றிரவு நடந்த ஜாக்ரானின் போது திடீரென கீர்த்தனை மேடை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 45 வயது பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த டெல்லி முதல்வர் தனது எக்ஸ் வலைதளத்தில், நேற்று நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பலியாகி உள்ளார். 

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். காயமடைந்த 17 பேர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் தெரிவித்திருப்பதாவது, நேற்றிரவு  நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கை பராமரிக்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சுமார் 1500 முதல் 1600 பேர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். முக்கிய விஐபிகள், அமைப்பாளர்கள் ஆகியோருக்கு இரும்பு சட்டத்தால் கட்டப்பட்ட மேடை அமைக்கப்பட்டது. 

இந்த மேடை பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi temple platform collapsed accident woman died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->