கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது..24 மணி நேரத்தில் 3 பேர் பலி!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு  பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில்,  கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள் நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 6800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

COVID 19 cases are nearing 7,000 3 people died in 24 hours


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->