கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அனைவரும் கட்டாயம் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டுமென மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தது.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து, ரயில் மற்றும் திரையரங்கு உள்ளிட்ட இடங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதே தவிர கட்டாயமில்லை என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona vaccine is not mandatory central Government announcement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->